நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலையான பின்னர் தன்மைப்பற்றி வெளியிட்ட கருத்து தொடர்பாக விசாரணை நடத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர சட்டமா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அவர்களுக்கு பிணை வழங்க வேண்டாமென தான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாறு எந்த அறிவித்தலையும் நான் விடுக்கவில்லை. இதனால் அவரின் கருத்து தொடர்பாக ஆராய்ந்துபார்க்க வேண்டுமென அவர் சட்டமா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.