மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்க வீதியிலுள்ள வீடொன்றினுள் உட்புகுந்த வாள்வெட்டு கும்பல் அவ்வீட்டின் மீது தாக்குதலை நடாத்தி சேதங்களை ஏற்படுத்தியதுடன் பெற்றோல் குண்டு தாக்குதலையும் நடாத்தியுள்ளது.
நேற்றுமாலை (திங்கட்கிழமை), 6:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து சுமார் 200 அடி தொலைவில் மானிப்பாய் பொலிசார் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவும் மானிப்பாய் லோட்டன் வீதிப்பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.