வல்வெட்டித்துறையில் அகற்றப்பட்டது பதாகை!

வல்வெட்டித்துறை சந்திப்பகுதியில் கட்டப்பட்ட விஜய் பதாகை நகராட்சியால் அகற்றப்பட்டு விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. பிரதேச மக்களினால் வல்வெட்டித்துறை நகரசபையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்தே காவல்துறை உதவியுடன் விஜய் பதாகை நேற்று இரவு அகற்றப்பட்டுள்ளது.

முன்னதாக வல்வெட்டித்துறை சந்தியினில் கட்டப்பட்ட விஜய் பதாகை இனந்தெரியாதோரால் கிழித்து சேதமாக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து பதிலுக்கு தீருவில் வீதியினில் புதிய பதாகை தொங்கவிப்பட்டிருந்தது.
இந்நிலையினில் பொதுமக்கள் முறைப்பாட்டையடுத்து நகரசபை அனுமதியின்றி தொங்கவிடப்பட்ட பதாகையே தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ்.நகரினில் வைக்கப்பட்ட பதாகையொன்றும் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்