சிங்களப்பகுதியில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு – பதறியடித்து ஓடிய மக்கள்!

இலங்கையின் தெற்கே மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரிய வெளிச்சத்துடனான சத்தமொன்று கேட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் பதறித்துடித்து வீடுகளுக்குள்ளும் கட்டடங்களுக்குள்ளும் ஓடியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

தென்னிலங்கை வானில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு பதறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்!

இது ஒரு வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுக்கள் பிரவேசிப்பதற்கான முன்னாயத்தமாக இருக்கலாம் என அங்குள்ள மக்கள் கருதுகின்றனர். இதனால் குறித்த பகுதிகளில் அமைதியின்மை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிபிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்கையில், குறித்த சம்பவம் வேற்று கிரகவாசிகளின் பிரவேசமா அல்லது வேறு ஏதேனும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்