புதிய அரசியலமைப்பு இலங்கைக்கு தேவையில்லையென அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ளனர்.
உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களை சேர்ந்த மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட உயர்பீடத்தினர் இன்று மாலை கூடி இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி புதிய அரசியலமைப்பு தேவையில்லையெனவும் அரசியலமைப்புக்கான அரசாங்கத்தின் யோசனையை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
