கைதான பிக்குவிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் மீட்பு – நான் அவன் இல்லை

ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பிக்குவிடமிருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர் இரண்டு பெயர்களில் இரண்டு முகவரிகளில் குறித்த அடையாள அட்டையை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிக்குவை போன்று ஒரு அடையாள அட்டையும் , சாதாரண பிரஜை போன்று வேறு அடையாள அட்டையையும் வைத்திருந்துள்ளார். இவர் எதற்காக இந்த இரண்டு பெயர்களில் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்தார் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்