அரியாலையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் இறப்புத் தொடர்பில் நீதி பெற்றுத்தருமாறு பிரதேச மக்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொலைச்சூத்திரதாரிகளை பொலிஸார் இனங்கண்டு கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
கடந்த ஞயிற்றுக்கிழமை யாழ். மணியந்தோட்டப் பகுதியில் வைத்து டொன்பொஸ்கோ (வயது – 25) இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
யாரால் எதற்காக அவர் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுதவிர, இது குறித்த விசாரணைக்காக பொலிஸ் குழு ஒன்று இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்யவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.