அரி­யாலை கொலைக்கு நீதி கோரி முறைப்­பாடு

அரி­யா­லை­யில் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்ட இளை­ஞ­னின் இறப்­புத் தொடர்­பில் நீதி பெற்­றுத்­த­ரு­மாறு பிர­தேச மக்­க­ளால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்­பா­ணப் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கொலைச்­சூத்­தி­ர­தா­ரி­களை பொலி­ஸார் இனங்­கண்டு கைது செய்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அவர்­க­ளது முறைப்­பாட்­டில் கோரப்­பட்­டுள்­ளது.

கடந்த ஞயிற்­றுக்­கி­ழமை யாழ். மணி­யந்­தோட்­டப் பகு­தி­யில் வைத்து டொன்­பொஸ்கோ (வயது – 25) இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளின் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்­டார்.

யாரால் எதற்­காக அவர் கொல்­லப்­பட்­டார் என்று பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இது­த­விர, இது குறித்த விசா­ர­ணைக்­காக பொலிஸ் குழு ஒன்று இன்று யாழ்ப்­பா­ணத்­துக்­குப் பய­ணம் செய்­ய­வுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்