செம்மலையைச் சேர்ந்த 8 அகவையுடைய சிறுவன் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனைத் தரப்புத் தெரிவித்தது.
முல்லைத்தீவு செம்மலை முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கமலநாதன் பிறையாளன் (வயது – 8) என்ற சிறுவனே நேற்று உயிரிழந்தான்.
உபாதை காரணமாக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவ மனையில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டான்.
சிகிச்சை பயனளிக்காது நேற்று அதிகாலைஉயிரிழந்தான்.விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோரி டம் ஒப்படைக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்