கொலை குற்றச்சாட்டில் ஒரே குடம்பத்தை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர்.ஹெயின்துடுவ இன்று இந்த மரண தண்டனையை வழங்கியுள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் இந்திக்க பொன்சேகா என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 40 மற்றும் 45 வயதுடைய சகோதரர்கள் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்