வாடைக் காற்று ஆரம்பமானதையடுத்து புத்தளம் மாவட்டத்தில் கரைவலைத் தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் வள்ளங்களில் கரைவலையை ஏற்றி மீனவர்கள் தமது தொழிலை ஆரம்பித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது சாலை மற்றும் கும்பலா மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகின்றன.
சாலை மீன்கள் ஒரு கிலோ கிராம் இருபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றதுடன், விற்பனை செய்யப்படாத சாலை மீன்கள் கறுவாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றன.