வவுனியாவில் யானைத் தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பூவரசங்குளம், குருமன்காடு ஆகிய பிரதேங்களில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 3 யானைத்தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் இன்று வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.