நாட்டின் கடன் சுமைக்கு முகம் கொடுத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்குளியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.