யாழில் வாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது

யாழ். மடத்தடி வீதியில் வாள்களுடன் நின்ற 4 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பொலிஸார் நேற்று இரவு 11 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் 4 இளைஞர்கள் வாள்களுடன் வீதியில் நின்றுள்ளனர்.

4 பேர்களிடமும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் யாழ்.மடத்தடி மற்றும் இராசாவின் தோட்டம் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், நால்வரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்