போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது!

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் போரினால் பாதிக்கப்பட்டவருக்கு சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது.

நவாலி வடக்கு, மானிப்பாயைச் சேர்ந்த நடேசு பிரபாகரன் என்பவர் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சொந்தமாக கராஜ் ஒன்றை அமைப்பதற்கு உதவிசெய்யுமாறு கோரியிருந்ததையடுத்து வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பயணாளர் கராஜ் அமைப்பதற்கு தேவையான சீமெந்து மற்றும் தகரம் என்பன மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் சார்பில் கடந்த புதன் கிழமை(25.10.2017) அன்று அமைச்சர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்