சுருக்குவலைத்தொழிலால் உள்ளூர்மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (2017.11.01) மாலை நான்குமணியளவில் முல்லைத்தீவின் கள்ளப்பாட்டில் நடைபெற்றது.
உள்ளூர் மீனவர்களின் அழைப்பை ஏற்று வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட மீனவர்கள், சுருக்குவலைகளுக்கான இசைவினை(அனுமதியை) இனிமேலும் வழங்கக்கூடாது எனத்தெரிவித்தனர். மேலும், எதிர்வரும் 2017.11.04ஆம் திகதி அனைத்து கடற்றொழிலாளர் சங்கங்களின் சார்பாளர்களையும் அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தனர்.