ஆற்றில் மூழ்கிய 5 பேரின் சடலங்கள் மிட்பு!

மாத்தளையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனவர்களில் ஐவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லக்கல – எடன்வல, தெல்கமுவ ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது காணாமல் போன எட்டுப் பேரில் ஐவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் மூவரை காணவில்லை எனவும் அவர்களை தேடு நடவடிக்கை பொலிஸார் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழ்ந்த ஐவரில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள மூவரும் பெண்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாத்தன்டிய பிரதேசத்தில் இருந்து வருகைத்தந்த 12 பேரில் 8 பேர் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்