நுழைவிசைவு இல்லாமல் சட்ட விரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இருவரும், தெகிவளைப் பகுதியில் உணவு விடுதி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்