வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பம்!

வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள வன்னி இன் விருந்தினர் விடுதியில் இன்று 12 காலை 10.30மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ள­ரான எம்.ஏ.சுமந்­திரன் , பாராளுமன்ற உறுப்பினரான சாந்தி சிறீஸ் கந்தராசா, உட்பட கட்சியின் முக்கிய உயர் பீட உறுப்பினர்களுடன் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் தற்போதைய கள நிலைமைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்