முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்!

முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு பயிற்சிகளை வழங்குவதை விடுத்து அவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லையென குறிப்பிட்டார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்