ஜெயலலிதா இருந்த போது சோதனை நடத்தாத வருமான வரித்துறையினர், தற்போது நடத்துவது ஏன்? என்னும் கேள்வியினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார்.
இன்று (சனிக்கிழமை), ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்திருந்த அவர்,
இவ்வளவு சொத்துக்களும் சசிகலா சம்பாதித்ததா? எவ்வாறு சம்பாதித்தார்? ஒரு பிரிவினரை மட்டும் குற்றவாளியாக்க முடியாது.
இந்த அமைச்சர்கள் வசூழித்து கொடுத்ததில் கட்டிய கப்பல் தான் இது. இங்கு ஏராளமான குற்றவாளிகள் உள்ளனர் என, சீமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.