வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஈபிஆர்எல்எவ் கட்சியில் இருந்து வெளியேறவுள்ளனர்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஈபிஆர்எல்எவ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் இணையவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட உறுப்பினர் எஸ்.தியாகராசா, எஸ்.இந்திரராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் தமிழரசுக்கட்சியில் இணையவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

குறிப்பாக ஈபிஆர்எல்எவ் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து, புதிய கட்சியாக செயற்படவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த கட்சித்தாவுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்