நடிகர் விஜய்யை மடிந்த மாவீரர்களுக்கு சமமாக போற்றி கடிதம் எழுதிய கிளிநொச்சி விஜய் ரசிகர்கள்!

கிளிநொச்சி நகர் பகுதியில் இயங்கிவரும் இளையதளபதி விஜய் நற்பணி மன்றம் என்னும் அமைப்பின் தலைவரால் நடிகர் விஜய் அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி அனுப்பப்பட்டுள்ளது.

அதில் விஜய் அவர்களை பலவாறாக வாழ்த்தி மடல் வரைந்துள்ளதோடு கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றத்தின் பணிகள் தொடர்பிலும் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் “ஈழத்தில் மடிந்த மாவீரர்களுக்கு நிகராக ஈழதமிழ் மக்கள் உங்களை மனதில் வைத்து நினைக்கின்றனர் ” என குறிப்பிட்டு சாதாரண ஒரு நடிகனை பல வலிகளை மனதில் சுமந்து தாய் மண் விடிவு வேண்டி தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீர புனிதர்களுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் வேதனைக்குரியது என்றும் தமிழ் இளைஞர்கள் மற்றும் ஈழ உறவுகள் பலர் சமூகவலைத்தளங்களில் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சிறுமையானவர்களின் செயற்பாட்டினை ஆர்வக்கோளாறென்றும் கடந்துசெல்லமுடியாது நல்லவைகளை செய்யுங்கள் வரவேற்கிறோம். அதற்காக எம்நெஞ்சின் நாயகர்களை எமக்காய் உயிர்கொடுத்த உத்தமர்களை எவருடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தையே இல்லையா? எங்கே செல்கிறோம்நாம். இத்தனை அடக்குமுறைகளுக்குள்ளும் மாவீரரை மனதிருத்தி அவர்களவில் இல்லாவிடினும் சிறுதுரும்பைதானும் அதையிட்டு தேசியத்திற்காய் ஏதேனும் செய்துவிடமுடியாதா என்றெண்ணி பல இளைஞர்கள் செயற்பட இவ்வாறான சிலரது சிறுமைத்தனமான செயற்பாடுகள் தலைகுனிவை ஏற்படுத்துகிறது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்