ஆவா குழுவின் முக்கியஸ்தர் கைது!

ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவரை சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை இன்று காலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சின்னா என அழைக்கப்படும் ரவி கிருஸ்ணா என்ற 23 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், ஆவா குழுவில் முக்கிய அங்கம் வகித்து வந்தவர் என்றும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட இளைஞரை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்