சிங்கக்கொடி விவகாரம்: வடக்கு முதல்வருக்கு ஆளுனர் கடிதம்!

வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியினை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் விளக்கம் கோரியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் இந்த விளக்கத்தினை ஆளுநர் கோரியுள்ளார்.

முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தம்முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் என்பது அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசிய கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச்சரவை தலைவர் என்ற ரீதியில் விளக்கமளிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்கள் சிலதும் முதலமைச்சருக்கு ஆளுநரினால் இன்று(23) மதியம் பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்