மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு கனடா

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 19.11. 2017 ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு, மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

இந்த மதிப்பளிப்பு நாளுக்குக் கடந்த ஆண்டுகளை விடவும் பெருந் தொகையான மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்து, காந்தள் மலர் வைத்துச் சுடர் ஏற்றி, அவர்களது நினைவுகளோடு வீர வணக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தாய் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த தமது பிள்ளைகளின் நினைவுகளைப் பெற்றோர்கள,; சகோதரர்கள்,நினைவுரைகளாக எடுத்துரைத்தனர்.

இங்கு பிறந்து வளர்ந்து வரும் சிறுவர்கள், தமது மாமா, சித்தப்பபா, மாமி சித்தி என்ற உறவு முறையோடும், எமது மாவீரர்கள் என்ற உணர்வோடும் தாயகப் பாடல்களைப் பாடியும், தமிழில் பேசியும் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகத்தோடு மகளிர் அமைப்பும் இணைந்து நின்று, மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நாளை முன்னெடுத்தனர். அன்றைய நாளில் இளையோர்; அமைப்பினர், செயற்பாட்டாளர்கள் தொண்டர்கள், இன உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து மாவீரர்களை வணங்கி நின்றனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

தொடர்பு இலக்கம்.647980 5219.

About இலக்கியன்

மறுமொழி இடவும்