வணக்க நிகழ்வுக்குத் தயாரானது வன்னிளாங்குளம் துயிலும் இல்லம்

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதற்காக மேற்படி துயிலும் இல்லம் மிகப் புனிதமாகத் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவை ஆக்கிரமித்த சிறிலங்கா படையினர் குறித்த துயிலும் இல்லத்தையும் இடித்து தரைமட்டமாக்கினர்.

இதனால், அந்த இடமே வனாந்தரமாகக் காட்சியளித்தது. இதனை துப்புரவு செய்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நாளை அங்கு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தவிருக்கின்றனர்.

துயிலும் இல்லம் சிவப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. துயிலும் இல்ல மத்தியில் புற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பாதையும் சீரமைக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றல் இடம்பெறும்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்