மாவீரர் நாள் நியூசிலாந்து – 2017

மாவீரர் நாள் தமிழீழ விடுதலைக்காகப்போராடி தமது இன்னுயிரை  ஈந்தவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலிசெலுத்தும் ஒரு நாள்ஆகும்.இம்மாவீரர்கள் எம் வரலாற்றின்அழியா நினைவுச் சின்னங்கள்.எம்மினம் வாழ தம் வாழ்வை தியாகம்செய்த தியாச்சுடர்கள்.இவர்களின்உன்னத தியாகத்தை போற்ற எமக்குகிடைத்த ஒரு உன்னத நாளே இம்மாவீரர் நாள். இம்மாவீரர்  நாள் வழமைபோல் இம்முறையும் நியூசிலாந்துமண்ணிலே கார்த்திகை மாதம்  27ம்திகதி திங்கட்கிழமை  மாலை 6.30மணியளவில் , மவுண்ட் ரொஸ்கில்போர் நினைவு  மண்டபத்தில்நடைபெற்றது.

மாவீரர் 2ம் லெப் அமுதவள்ளிஅவர்களின் சகோதரன் சர்வேஸ்வரன்அவர்கள் பொதுச்சுடரை ஏற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் யாவும்ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்துநியூசிலாந்துதேசியக் கொடியினைமகளீர் அணியின் பொறுப்பாளர் சுமதிஅவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்துதமிழீழ தேசிய கொடியினை தமிழர்ஒருங்கிணைப்பு குழுவின் நிதிபொறுப்பாளர் யோகராசா அவர்கள்ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்துஈகைச்சுடரினை மாவீரர் வீரவேங்கைமுகிலன் மற்றும் 2ம் லெப் முகில்ஆகியோரின் சகோதரி மதி அவர்கள்ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்துமக்கள் அனைவரும் எழுந்துஅகவணக்கம்செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மக்கள்அனைவரும் மலர் தூவி தீபம் ஏற்றிமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து தேசிய தலைவர்அவர்களின் 2008ம் ஆண்டின் மாவீரர்நாள்உரையின் ஒரு பகுதி திரையில்காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து சிறப்புரையினை  மாவீரர்திலகா அவர்களின் சகோதரர் துறைமாஸ்டர் அவர்கள் நிகழ்த்தினார். தனதுஉரையில் மாவீரர்களின் வலிகள்பற்றியும், அவர்களின் அளப்பரியதியாகங்களை பற்றியும் எமதுபோராடடம்  பற்றியும் கூறினார்.

தொடர்ந்து மாவீரர்  தியாகங்களைகாட்டும் அழகு நடனங்கள், உணர்ச்சிமிகு கவிதைகளும் பேச்சுக்களும்பாடல்களும் இடம்பெற்றது.

இறுதியாக தமிழீழ எழுச்சிப்பாடல்இசைத்ததை தொடர்ந்து நிகழ்வுகள்யாவும் நிறைவு பெற்றன. 2009ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு பின்னர் மக்களும் முன்னாள் போராளிகள் பலரும் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து இம்முறை மாவீரர் நாள் நூற்றுக்கணக்கான  மக்களுடன் மிகச் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்