மலையகத் தமிழர்களைத் தோட்டக்காட்டான் என விழித்துக் கூறிய ஏ.எல்.எம். அத்தாவுல்ல மீது, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் குடிதண்ணீரை ஊற்றியதுடன், அவரைக் கடுமையாகத் திட்டித்தீர்த்தார். சக்தி ரி.வியின் இன்று (24) இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்ற இந்தக் காட்சியை மக்கள் நேரில் பார்வையிட்டனர். சக்தி ரி.வியில் வாராந்தம் நடைபெறும் மின்னல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு அரசியல் விவாதம் நடத்தப்படும். இதன்போது, வாசகர்கள் நேரடியாகவே அந்த அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்பினால் […]