தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க தூதுவர் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 2001 செப்ரெம்பர் 11 தாக்குதலை அடுத்து, தமது நாடு தீவிரவாதிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து […]
Category: செய்திகள்
அம்பாந்தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது
காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் நெருங்கிய உதவியாளர்களாவர். சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் அம்பாந்தோட்டையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாட்களாக அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, […]
கோத்தாவை போல உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை
தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், “சீனா மற்றும் தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இலங்கைக்கான அதன் அர்த்தம்“ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு, முன்னர் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, […]
சோதனையிட வருவது தெரிந்தும் ஏன் படங்களை அகற்றவில்ல – கட்டளைத் தளபதி
யாழ்.பல்கலைக்கழகம் சோதனையிடப்படும் விடயம் உடனடியாக நடந்த ஒன்றல்ல. அது முன்னதாகவே அறிவிக்கப்பட்டு நடந்தது. ஆகவே அவா்கள் அங்குள்ள படங்களை அகற்றியிருக்க முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ள யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சி, பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் இடம்பெறாது என உறுதிப்படுத்துங்கள்” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றாா். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையால் தீர்மானிக்கப்படதற்கு அமைய பீடாதிபதிகள் மற்றும் பதிவாளர் யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் […]
முன்னாள் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு சிறைத்தண்டனை
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஅப்புஹாமி பியசேனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நான்கரை ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் செயலக வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவருக்கு .இந்த தண்டனை விதிக்கப்பட்டது. பிரதமர் செயலக வாகனத்தை திரும்பக் கையளிக்காமல் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், 2016 ஜூலை 29ஆம் நாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த […]
ரிஷாட் பதியுதீன் வீடு பாதுகாப்பு தரப்பினரால் முற்றுகை!
மன்னார் – தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டில் இருந்து எந்தவித சந்தேகத்திற்குரிய பொருட்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதன்படி தற்போதுவரை பல வெடிபொருட்கள், ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் பலரும் […]
சஹ்ரானுக்கு சொந்தமான வீடு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வசம்
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இலங்கை தலைவர் சஹ்ரானுக்குச் சொந்தமான வீட்டை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெற்றுள்ளனர். தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தெமட்டகொட – மஹவில கார்டினில் அமைந்துள்ள வீடே இவ்வாறு பொறுப்பேற்றுகொண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர். இதேவேளை, தற்கொலை குண்டுதாரிகளின் 14 கோடி ரூபாய் பணமும் 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு தொகை பணத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய பணத் தொகை […]
வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின
வவுனியா – மன்னார் வீதி, சாளம்பைக்குளம் பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே குறித்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது, குறித்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து லெமினேட் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த ஆவணங்களை, பூவரசங்குளம் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, இது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறைக்கு தகவல் வழங்கிய இஸ்லாமிய இளைஞன் அடித்துக் கொலை!
அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இஸ்லாமிய தீவிரவாத குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய இஸ்லாமியா் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் பிரதேசத்தில் வடை விற்பனை செய்து வந்தவர் எனவும் காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர். தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறித்து பல தகவல்களை பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி வந்துள்ளார். எனவே […]
“இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் திகழ்பவர் பிரபாகரன்” வைரமுத்து அதிரடி பேச்சு!
இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் திகள்பவர் ஒன்று பெரியார் இன்னொருவர் பிரபாகரன் என்று புகழ்ந்து பேசியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் இடம்பெற்ற தமிழாற்றுப்படை நிகழ்வில் கலந்துகொண்டு தந்தை பெரியார் பற்றி கவிதை படைத்த கவிப்பேரரசு வைரமுத்து இறுதியில் முடிக்கும்போது இக்கருத்தை வெளியிட்டிருந்தார். அப்போது அரங்குநிறைய கரவொலியும் கூச்சலும் நிறைந்தது.அதேவேளை அந்த அரங்கில் அதிகம் திமுக அபிமானிகள் இருந்தும் அவர்களின் தலைவர் கருனாநிதியின் பேரை சொல்லாதது பலருக்கு வருத்தத்தையும், சலசலப்பும் ஏற்படுத்தியிருந்தது.
யாழில் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கை
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது
தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாணவர்களின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் […]











