உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது!

உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள புதிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மற்றும் வலிகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் அ. ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

குறித்த புதிய கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஜனநாயக தமிழரசுக்கட்சி ஆகியன அங்கம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்