சட்டதரணி மணிவண்ணனிடம் பொலிஸார் விசாரணை!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகிய சாமுவேல் இரட்ணஜீவன் கூல் வழங்கிய முறைப்பாட்டையடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மேஜர் வேட்பாளருமான சட்டத்தரணி வி. மணிவண்ணனிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசி மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது.

அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான மேஜர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள்.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரத்ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானது. அந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசமைப்புச் சபையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே தம்மீதான அவதூறு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாமுவேல் இரட்ணஜீவன் கூல், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்மீது அவதூறாகப் பேசிய விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணைவேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார்.

அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கி பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கினர்.

சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அன்றைய நிகழ்வில் பங்குபற்றிய சிலர் மற்றும் ஊடகவியலாளர்களை அழைத்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபம் உரிய வகையில் அனுமதி பெறப்பட்டா தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நடத்தப்பட்டது என்பதுக்குரிய விசாரணையை மண்டப நிர்வாகத்திடம் நடத்தவேண்டும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவுக்கு எழுத்துமூல கட்டடையை வழங்கினார்.

வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவினர் நேற்று முற்பகல் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை இடம்பெற்றது. விசாரணைகள் தொடரவுள்ளதால் அதுபற்றிய தகவல்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்