தமிழீழ விடுதலைப்புலிகளை நான் காட்டிக்கொடுக்கவில்லை சொல்கிறார் கருணா!

தமிழீழ விடுதலைப்புலிகளை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணியின் தலைவரான விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கான கட்சி அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டது உண்மை எனவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் நான் காட்டிக் கொடுக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தானே உருவாக்கியதாக தெரிவித்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக இயங்கியதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக தான் இருந்தாலும் தேசியக் கட்சியில் தான் ஒருபோதும் தேர்தல் கேட்டு வரவில்லை, என தெரிவித்த விநாயகமூரத்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழனை முதலமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் திமிரை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்