மோதிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்

வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் இரு கட்சிகளின் வேட்பாளர்களின் காரியாலயம் மற்றும் வீடு என்பன தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச சபைக்கு கிண்ணயடி 11ஆம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக தமிழ்த் தேசிய பேரவையில் போட்டியிடும் கே.குணசேகரம் என்பவரது வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த அவரது தேர்தல் விளம்பர பதாதை சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டுக்கு கல்லெறிந்துள்ளதுடன் வீட்டு ஓடுகளும் உடைந்துள்ளன.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களே மேற்கொண்டுள்ளார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக தமிழ் தேசிய பேரவையில் போட்டியிடும் கே.குணசேகரம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, கோறளைப்பற்று பிரதேசசபைக்கு கிண்ணயடி 11ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் எம்.கோகுலதாசனை ஆதரித்து கிண்ணயடி துரையடி வீதியில் திங்கள் கிழமை திறப்பதற்கு இருந்த கட்சி காரியாலயத்திற்கு கழிவு ஒயில் விசிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக தமிழ் தேசிய பேரவையில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்களே செய்துள்ளார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்