ஊவா மாகாண முதலமைச்சர் கைது!

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிடச் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியொருவரின் வாயிலாக அவர் இன்றுக் காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்