புங்குடுதீவு மகா வித்தியாலயத்தினை அண்மித்த சந்தியில் கடற்படையினரின் கவசவாகனம் ( பவள் ) மோதியதில் பாடசாலை சிறுமி இறந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் தனது மாமாவுடன் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோதே கவசவாகன சாரதியின் கவனயீனத்தால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடற்படையினருக்கான உணவுப்பண்டங்களை ஏற்றியிறக்க பயன்படுத்தப்பட்ட பவள் வாகனமே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகமாக இந்த வாகனத்தை செலுத்தவேண்டாமென்று கோத்தம்பர முகாம் கட்டளை அதிகாரிக்கு மக்கள் பல தடவைகள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்ததாகவும் குறிப்பாக இரவு வேளைகளில் ஒரு முன்பக்க விளக்குடன் பல நாட்களாக இந்த வாகனம் ஒடித்திரிந்தமை குறித்தும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.