சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து!

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்பாட்டில் இலங்கையின் சார்பில் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும், சிங்கப்பூரின் சார்பில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி, சிங்கப்பூர் பிரதமர், இலங்கை பிரதமர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்