சிராந்தி ராஜபக்‌ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்‌ஷ பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சிறிலிய அமைப்பிற்கு சொந்தமான டிபெண்டர் ரக வாகனம் வஸீம் தாஜுதீனின் படுகொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை அவரது புதல்வரான யோஷித ராஜபக்‌ஷ நா​ளை (16) பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவிடம் முன்னிலையாகவுள்ளார்.

வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவரிடமும் விசாரணை செய்யப்பட உள்ளதால், தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்