அன்பான மக்களே சலுகைகளை முன்னிறுத்தி மாவீரத்தை கொச்சைப் படுத்திவிடாதீர்கள்!

பெப்ரவரி-10 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்எங்களுக்கு வேலை எடுத்து தந்ததே அவங்கள் தான்…எங்கள் நெருங்கிய உறவுகளுக்கு வேலை எடுத்து கொடுத்தவர்கள்…விளையாட்டு மைதானத்திற்கு காணி தந்தவர்கள்… தாறன் என்று சொன்னவர்கள்…சனசமூக நிலையம் கட்டித் தந்தவர்கள்… கட்டித் தாறன் என்றவர்கள்…இதுபோன்ற இன்னோரன்ன விடயங்களை செய்தார்கள்… செய்வார்கள்… என்று உங்கள் வாக்குளை வீணை க்கோ, கை யிற்கோ, யானை க்கோ,தாமரை மொட்டுக்கோ, வீடு க்கோ செலுத்தும் எண்ணத்தில் உள்ளவர்களா நீங்கள்…

அன்பான மக்களே சிந்தியுங்கள்!

நாற்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தமது இன்னுயிரை ஆகுதியாக்கியது இவ்வாறான சலுகைகளுக்காக அல்ல.

எத்தனை எத்தனை பேர் பல்கலைக் கழக பட்டப்படிப்பையும் பள்ளிப் படிப்பையும் அரச வேலையையும் உயர் பதவிகளையும் தூக்கியெறிந்துவிட்டு விடுதலைப் போராளியாக அணிவகுத்தார்கள்.

அவையெல்லாம் கடந்த இன விடுதலை எனும் உயரிய இலட்சியத்தின் வழியே உலகம் வியக்கும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய ஒப்புவமையற்ற மாவீரத்தை கொச்சைப்படுத்துவதாகவே இவ்வாறான சலுகைகளை முன்னிறுத்தி மேற்கூறிய சின்னங்களுக்கு வாக்களிப்பது அமையும்.
இலட்சிய வீரர்களின் கனவுகளை தோள்களில் தூக்கி சுமக்காவிட்டாலும் பறவாயில்லை அவர்கள் கனவை கலைத்து விடாதீர்கள்.அன்பான மக்களே!சிந்தித்து வாக்களிப்போம்!

ஈழதேசம் இணையம்!

About காண்டீபன்

மறுமொழி இடவும்