கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் பத்து வீட்டுத் திட்டம் என்ற பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய குடும்பப் பெண்ணெ இவ்வாறு கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இக்கொலைச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.