சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சியாகவே இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேனவின் ஏற்பாட்டிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.