ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலை வந்தடைந்த 7 ஆம் நாள் நீதிக்கான ஈருருளிப் பயணம்.

Phalsbourg நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான ஈருருளிப் பயணம் அம் மாநகர முதல்வரிடம் மனு கையளிக்கப் பட்டது, தொடர்ச்சியாக 43 KM தொலைவு கடந்து Saverne மாநில முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உதவியாளரிடம் எமது தார்மீக அடிப்படை உரிமை சார்ந்தும் பேசப்பட்டது. வரலாறுகளின் வழித்தடங்களில் நியாயமான கோரிக்கைகள் என்றும் மறுக்கப்பட்டது கிடையாது. அவ்வழியே எமது போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளும். நடந்து கொண்டு இருக்கும் இனவழிப்பு , கலச்சார சீர்கேடு, நில அபகரிப்பு… எனும் திட்டமிட்ட சத்தமில்லா இனவழிப்பும் தெளிவாக பேசப்பட்டு எழுத்து வடிவாகவும் கையழிக்கப்பட்டது. Strasbourg மாநகர சபை முதல்வரையும் சந்தித்து அவரிடமும் எமது மனு கையழிக்கப்பட்டு தொடர்ச்சியாக Strasbourg வாழ் தமிழ் மக்களின் வரவேற்போடு ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் எமது இனவழிப்புச் சான்றின் படங்கள் , எமது கோரிக்கைகள் தாங்கிய பதாகைகள் கொண்டு ஆர்ப்பாட்டம் அமைதிவழியில் நிகழ்த்தப்பட்டது.

அவ்வேளையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்து மிக முக்கிய அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஆலோசனை சபையில் வெளிநாட்டு வெளிவிவகார அமைப்புக்கு பொறுப்பாக இருக்கின்ற இரு அதிகாரிகளை சந்தித்து மேலும் விரிவாக சமகால அரசியல்ச் சூழ்நிலை குறித்தும் இனவழிப்பிற்கான சுயாதீன விசாரணையின் முக்கியம் குறித்தும் அவ்விசாரணை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு நாளை மீண்டும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐ. நா முன்றல் நோக்கி எமது இலட்சியப் பாதையில் நீதி வேண்டி மனிதநேய ஈருருளிப் பயணம் தொடரும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்