தீவகம் தெற்கு வேலணைப் பிரதேச சபைத் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இன்று காலை நடைபெற்ற தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாவலனும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கருணாகர குருமூர்த்தியும் போட்டியிட்டனர்.
இருவரும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் கருணாகர குருமூர்த்தி தெரிவு செய்யப்பட்டார்.