9.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை கட்டுநாயக்க பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து கொழும்புக்கு, பயணியொருவர் கொண்டுவந்த தங்க ஆபரணங்களை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவரமுயன்ற, அரச புலனாய்வு சேவை உத்தியோகத்தர் ஒருவரே, சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 2 கிலோ கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.