மைத்திரியுடன் படத்தில் இருக்கும் சிறுவர்கள் யார்? ஜ.நா அதிகாரிகள் கேள்வி!

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற குழந்தைகள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐநாவின் அலுவலக விசேட பணியாளர் சோமஸ் மற்றும் வவுனியா பிரஜைகள்குழு, மற்றும் சுழற்சிமுறையில் போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்களும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்புத் தொடர்பாக ஐநா குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். இதற்கான முறையான திட்டங்களையும் அரசாங்கத்துக்கு வகுத்துக் கொடுத்துள்ளோம் எனவும்தெரிவித்தனர்.

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டமானது இன்றுடன் 176 நாட்களைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்