மக்களின் உணர்வுகளில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்!
தமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்காலில் படுகொயை செய்யப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பொதுச் சுடரினைக் கொடுக்க படுகொலை செய்யப்பட்ட 150,000 மக்களுக்கான பொதுச் சுடர் ஏற்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.