அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ளாரா தினகரன்?

டி.டி.வி. தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டுள்ளனர். தினகரன் இல்லத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் வருகை தந்தனர். அவர்களுடன் சட்ட ஆலோசனயும் நடத்தப்பட்டது. சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட தினகரன் தரப்பு தயாராகி வருவதாக தெரிகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், ஜக்கையன், முத்தையா, முருகன், கோதண்டபாணி, ரெங்கசாமி, தங்கதுரை, மாரியப்பன், கென்னடி, ஜெயந்தி, பார்த்தீபன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க் களும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்