மணிவண்ணன் உயர் நீதிமன்றை நாடவுள்ளார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் கலந்துகொள்ளவதற்கு தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தே அவர் இந்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளார்.

இம் மனுவானது அடிப்படை உரிமைகள் மற்றும் நிர்வாகச் சட்ட வல்லுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சஞ்சீவ ஜெயவர்த்தனவால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்