முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி – முதல்வரை மாற்ற வலியுறுத்து!

டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து அவர்களின் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்.

அந்த கடிதத்தில், தங்களின் ஆதரவை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபை உடனடியாக வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., ஒருவர் அளித்த பேட்டியில், முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.

அரசு விமர்சித்த பன்னீர்செல்வத்தை அழைத்து பதவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. துணை முதல் அமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்திற்கு வழங்கியது தவறு. சசிகலா சொன்னதால் உங்களுக்கு ஓட்டு போட்டோம். எங்களை நிராகரிக்க காரணம் என்ன.

முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தோம். பரிசீலனை செய்வதாக ஆளுநர் கூறியுள்ளார். எங்களது நிலைப்பாட்டை அளித்து வந்துள்ளோம். பன்னீர்செல்வம் அனைத்து பதவிகளும் வாங்கி கொண்டு விட்டார். அவருடன் இருந்த எம்எல்ஏக்களின் நிலை என்ன.

இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்