தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரதமராக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய தொலைகாட்சி நிறுவன வளாகத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டு அதன் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன்போது அங்கு சென்ற மங்கள சமரவீர மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.