கனகபுரம் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு நினைவேந்தல்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு இன்று (27) நினைவேந்தல் நிகழ்வு அந்த துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

கிளிநொச்சியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக இங்கு திரண்டிருந்தனர். மாலை 4 மணியில் இருந்தே இங்கு மக்கள் திரளத் தொடங்கினர்.

பிரிகேடியர் தீபன், லெப்.கேணல் கில்மன் ஆகிய மாவீரர்களின் தந்தை பொதுச் சுடர் ஏற்றினார். தொடர்ந்து ஏனையவர்கள் சுடர்களை ஏற்றினர்.

கிளிநொச்சியின் பல பிரதேசங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வணக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்